முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

KGF - 3..!! மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் பிரஷாந்த் நீல்..!! வெறித்தனமா இருக்கப்போகுது..!!

Director Prashant Neel KGF He has given a mass update about the third part of the film.
10:33 AM Jul 05, 2024 IST | Chella
Advertisement

இயக்குனர் பிரஷாந்த் நீல் கே.ஜி.எப். படத்தின் மூன்றாம் பாகம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

Advertisement

கடந்த 2018ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் புதுப்புது சாதனைகளை படைக்க துவங்கியது. இப்படத்தில் யாஷ் உடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், கருடா ராம் உள்ளிட்ட பலரும் நடித்து அசத்தியிருந்தனர். மேலும் ரவி பஸ்ரூர் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இரண்டாம் பாகத்தின் முடிவில் யாஷ் இறந்துபோவது போல் காட்டியிருந்தாலும், கே.ஜி.எப் மூன்றாம் பாகத்திற்காக லீட் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், இயக்குனர் பிரஷாந்த் நீல் இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதன்படி "கே.ஜி.எப் 3 படம் நடக்கும். அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் ஏற்கனவே எழுதிவிட்டேன். அப்படி 3ஆம் பாகம் நடக்கவில்லை என்றால் கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் இறுதியில் 3ஆம் பாகம் குறித்த காட்சியை வைத்திருக்க மாட்டோம். அனைத்தையும் திட்டமிட்டு கே.ஜி.எப் 3 படப்பிடிப்பு துவங்கும்" என அவர் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பயனர்களே..!! இனி வாட்ஸ் அப்பில் இது கட்டாயம்..!! மெட்டா நிறுவனம் அதிரடி..!! செம அப்டேட்..!!

Tags :
kgfகே.ஜி.எஃப்.பிரஷாந்த் நீல்யாஷ்
Advertisement
Next Article