முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பன்றியை வளர்க்கிறார்’..!! ’காலில் விழுந்துவிட்டார்’..!! கடுமையாக விமர்சித்த சுசித்ரா..!!

01:38 PM Nov 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸின் ஓனர் கமல்ஹாசன் இல்லை. அவரே இந்த வாய்ப்பை விஜய் டிவியின் காலில் விழுந்துதான் வாங்கி இருக்கிறார் என பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

பிக்பாஸ் 7-வது சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போலவே, இந்த சீசனிலும் கமல் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் பிரதீப் விஷயத்தில் ரெட் கார்டு கொடுத்தது தவறு, நிக்சன் பெண்களை பாடி ஷேமிங் செய்ததைப் பற்றி விசாரிக்கவில்லை, மாயாவுக்கு அவர் நிறைய சுதந்திரம் கொடுக்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பாடகியும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சுசித்ரா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கமல் பற்றியும் கடுமையான குற்றச்சாட்டுகளை தனது சமீபத்திய பேட்டிகளில் கூறியிருக்கிறார். அந்த வகையில், அவர் தனது சமீபத்திய பேட்டியில், “கமல் ஒன்றும் பிக்பாஸ் ஓனர் கிடையாது. விஜய் டிவி காலில் விழுந்து அவருக்கு வாங்கிக் கொண்ட வாய்ப்பு இது. அவர் மக்கள் நீதி மய்யம் என்ற பன்றியை வளர்க்கிறார். அதை வைத்துக் கொண்டு வருகிற தேர்தலில் எல்லாம் அவர் வெற்றிப் பெற முடியாது” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

Tags :
கமல்ஹாசன்சுசித்ராபிக்பாஸ்
Advertisement
Next Article