For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா?  ஒரு கைப்பிடி "இந்த" பொருள் மட்டும் போதும்... 48 நாட்களில் நினைச்சது நிறைவேறும்..

kadan - super parigaram - salt makes more solutions
10:45 AM Jul 15, 2024 IST | Shyamala
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா   ஒரு கைப்பிடி  இந்த  பொருள் மட்டும் போதும்    48 நாட்களில் நினைச்சது நிறைவேறும்
Advertisement

பாடுபட்டு உழைத்து சம்பாதிக்கும்  பணம் கையில் தங்காமல் கடன்' கழுத்தை நெரிக்கிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்க.

திருஷ்டி கழிப்பது முதல் பரிகாரங்கள் வரை, ஆன்மீகத்தில் கல் உப்புக்கு பிரதான இடம் உண்டு.. காரணம், இந்த கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் தன்மை கொண்டது. அதனால்தான், கடலில் குளித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது..

Advertisement

ஒரு கிண்ணத்தில் உப்புக்கல்லை நிரம்பும் அளவுக்கு போட்டு, உங்கள் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இதனால், உங்கள் மீதுள்ள திருஷ்டிகள் கழிந்துவிடும். கல் உப்பு போலவே, இந்து உப்பையும் வாங்கி வைக்கலாம்.

பெரும்பாலும், வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பினை வாங்கி, கிச்சனில் வைக்கலாம். இந்த உப்பில் 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து பிரார்த்தித்து வருவதால் பணக்கஷ்டம் தீரும் என சொல்லப்படுகிறது.

ஒரு கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பை போட்டு, எலுமிச்சம்பழத்தை அதில் நடுவில் வைக்க வேண்டும்.. பிறகு 4 காய்ந்த மிளகாய்களை, பாத்திரத்தின் 4 மூலைகளிலும் வைத்து, அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில் வைக்க வேண்டும்.

அதேபோல, கல் உப்பு தீபம் ஏற்றி வைத்தால், குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். முக்கியமாக பௌர்ணமி நாட்களில் கல்உப்பு தீபம் ஏற்றினால், தொழில் தடை, வருமான தடை, பதிவு கிடைப்பதில் இருக்கும் தடைகள் அனைத்தும் 48 நாட்களுக்குள் நீங்கி, நீங்கள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

read more.. அதிர்ச்சி! புறாக்களால் சிறுவனுக்கு சுவாச கோளாறு..! மருத்துவர்கள் எச்சரிக்கை

Advertisement