For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Kallakurichi | கையை பிடித்து கதறி அழுத பெண்..!! ஆறுதல் கூறிய த.வெ.க தலைவர் விஜய்..!!

Tamil Nadu Vetri Kazhagam President Vijay personally met the people admitted to the hospital after drinking illegal liquor in Kallakurichi.
07:00 PM Jun 20, 2024 IST | Chella
kallakurichi   கையை பிடித்து கதறி அழுத பெண்     ஆறுதல் கூறிய த வெ க தலைவர் விஜய்
Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசும், மருத்துவ பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், அண்மையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும். மருத்துவ ரீதியான, பொருளாதார ரீதியான உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Read More : ’சட்டவிரோத மது விற்பனைக்கு எப்படி அனுமதி தர்றீங்க’..? உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி..!!

Tags :
Advertisement