முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கணவனின் நண்பருடன் கள்ளக்காதலில் இருந்த மனைவி…! 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!

06:40 AM Apr 25, 2024 IST | shyamala
Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவனின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

Advertisement

இந்த சம்பவம் ஆர்த்தியின் கணவர் ஸ்ரீகாந்துக்கு தெரியவர, இருவரையும் கண்டித்தார். அதனை பொருட்ப்படுத்தாத இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனையடுத்து, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்ட மனைவி ஆர்த்தி, கள்ளக்காதலன் இளையராஜாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு சமரசம் பேசுவது போன்று தேவகோட்டை அருகே உள்ள இலக்கினி வயல் காட்டுப்பகுதிக்கு ஸ்ரீகாந்தை மது அருந்த இளையராஜா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, தனது நண்பர்களுடன் சேர்ந்து தான் மறைந்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீகாந்தை சரிமாரி வெட்டி கொலை செய்துவிட்டு அங்கேயே புதைத்துள்ளனர். இதனையறிந்த மனைவி, ஊர்மக்களுக்கு சந்தேகம் வராத வகையில் குடும்ப பிரச்சனையால் கணவர் கோபித்துக்கொண்டு வெளியூர் சென்று விட்டதாக கூறி வந்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் போலீசார் எப்படியோ மோப்பம் பிடித்தனர். இதனையடுத்து, ஆர்த்தி மற்றும் இளையராஜாவிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் கொலை செய்தது அம்பளமானது.  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டி விட்டு நாடகமாடிய மனைவி ஆர்த்தியை 2 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Indonesia | உதயமாகும் புதிய சகாப்தம்.!! இந்தோனேசியா அதிபராக அறிவிக்கப்பட்ட பிரபோவோ சுபியாண்டோ.!!

Advertisement
Next Article