For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்றுமுன்...! காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்து... பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

Kalayar Kurichi Fireworks Factory Explosion... Death Toll Rises To 4
10:17 AM Jul 13, 2024 IST | Vignesh
சற்றுமுன்     காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்து    பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
Advertisement

காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் பட்டாசு தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் ஆலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த மாரியப்பன், முத்துவேல் ஆகியோர் உடல் சிதறி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். மேலும் சரோஜா, சங்கரவேல் ஆகியோர் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி பலி சரோஜா, நேற்று இரவும், அவரைத் தொடர்ந்து இன்று அதிகாலை சங்கரவேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
Advertisement