முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பேச மறுத்த காதலி…! மனமுடைந்த காதலன்..! சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைப்பு..!

10:10 AM May 09, 2024 IST | shyamala
Advertisement

காதலி பேச மறுத்ததால், இளம்பெண்ணை காதலன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகமான அஜ்மானில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இதில், இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் காதல் விவகாரம் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், காதலர்களுக்கு இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டது. இதனால், இளம்பெண் வாலிபருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தனது காதலி தன்னிடம் பேசாததால் கடந்த சில நாட்களாக வாலிபர் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, காதலியை சந்தித்த வாலிபர், தன்னிடம் பேச மறுப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த, வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு காதலியை சரமாரியாக குத்தினார். இதில், ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து பரிதாபமாக இளம்பெண் உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து, அங்கிருந்து தப்பிய வாலிபர், அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கும் தீ வைத்தார்.

தகவலின் பேரில் அஜ்மான் போலீசார் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்றனர். இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சூப்பர் மார்க்கெட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wow…!! ரூ.45,000 மதிப்புள்ள ஏசியை வெறும் ரூ.25,000-க்கு வாங்கலாம்..!! பிளிப்கார்டில் செம ஆஃபர்..!!

Tags :
crime news
Advertisement
Next Article