முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை..!! மாதம் ரூ.30,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க அக்.31ஆம் தேதியே கடைசி..!!

India Post Payment Bank, which is a part of the Indian Postal Department, has published an employment notification.
11:58 AM Oct 24, 2024 IST | Chella
Advertisement

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

நிறுவனம் - இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்

துறையின் பெயர் - கிராமின் டக் சேவக்

தேர்வின் பெயர் - IPPB எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024

காலிப்பணியிடங்கள் - 344 (தமிழ்நாட்டில் 13 காலியிடங்கள்)

கல்வித் தகுதி - விண்ணப்பதாரர்கள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

01.09.2024 இன் படி அஞ்சல் துறையுடன் கிராமின் தாக் சேவக் ஆக குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

IPPB Executive Recruitment 2024-க்கான நிர்வாகப் பதவிகளுக்கான ஆன்லைன் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. புதிய பயனர்களாக இருந்தால் முதலில் போர்ட்டலில் பதிவு செய்து, தங்கள் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை நிரப்பலாம்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.750 செலுத்த வேண்டும்.

சம்பளம் - மாத சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி - அக்டோபர் 31

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ippbonline.in./ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read More : மனைவியை கொன்றதற்காக 4 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கணவர்..!! திடீரென உயிரோடு வந்ததால் வழக்கில் ட்விஸ்ட்..!!

Tags :
இந்திய அஞ்சல் துறைஇந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிதமிழ்நாடு
Advertisement
Next Article