ஆதாரத்துடன் சிக்கிய ஜெயம் ரவி..!! யார் இந்த கெனிஷா..? கோவா ட்ரிப்பில் நடந்தது என்ன..? ஆர்த்தியின் கோபத்திற்கு இதுதான் காரணமா..?
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக, இதுபோன்ற விவாகரத்து பிரச்சனைகள் வரும்போது, பெரும்பாலும் நடிகர்களின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தான் செய்திகள் வெளிவரும். ஆனால், ஜெயம் ரவியின் விஷயத்தில் மொத்தமாக எல்லா குற்றச்சாட்டும் ஆர்த்தியின் மீது திரும்பியது.
ஆர்த்தி ஜெயம் ரவியை சந்தேகப்படுகிறார், ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அவருடைய மாமியாரின் ஆதிக்கம் இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளியானது. தற்போது, இந்த விவாகரத்தில் உண்மை காரணத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், கடந்த ஜூன் மாதம் வரை ஆர்த்தி மற்றும் ரவி இருவருக்கும் நடுவில் எந்த விரிசலும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு சினிமா தாண்டி சில நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர்.
அவர்களுடன் ஆண்டுதோறும் கோவா ட்ரிப் செல்வதை வழக்கம் வைத்திருக்கிறார். கோவாவில் ஒரு பப்பில் பாடகியாக இருப்பவர் தான் கெனிஷா பிரான்சிஸ். ஆரம்பத்தில் இவரின் குரலுக்கு அடிமையான ரவி, இப்போது அவருக்கே அடிமையாகி விட்டார் என்று சொல்லப்படுகிறது. காருக்குள் இருப்பது வெளியில் தெரியாமல் இருக்க கிளாஸ்களில் ஒட்டும் ஷீட்டுகளின் அளவு அனுமதித்த அளவை விட அதிகமாக இருந்ததால், கெனிஷா ஒரு முறை அபராதம் செலுத்தியிருக்கிறார்.
அந்த பில்லில் கார் ஜெயம் ரவி பெயரில் ரெஜிஸ்டர் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. அதே காரை அதிவேகமாக ஓட்டி ஜெயம் ரவி கோவாவில் ஒரு முறை அபராதம் செலுத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி, கெனிஷாவின் போன் நம்பரை True caller-ல் செக் பண்ணிய போது கெனிஷா ரவி என்று வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தன்னுடைய திருமணநாள். அன்று கூட சூட்டிங் இருக்கிறது என்று சொல்லி ரவி வெளியே கிளம்பிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் தான் அன்றைய நாளில் சூட்டிங் இல்லை என்பது ஆர்த்திக்கு தெரியவந்துள்ளது. இதனால் தான் ஆர்த்தி ரவியுடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார். இருப்பினும், ஆர்த்திக்கு ரவியுடன் சேர்ந்து வாழ விருப்பமாக கூறப்படுகிறது.
Read More : அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறை..!!