For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜாக்பாட் அறிவிப்பு..!! டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..?

07:28 AM Apr 15, 2024 IST | Chella
ஜாக்பாட் அறிவிப்பு     டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு     எவ்வளவு தெரியுமா
Advertisement

ஊழியர்களுக்கு இந்தாண்டு இரட்டை இலக்க ஊதிய உயர்வை அறிவித்துள்ளது டிசிஎஸ் நிறுவனம். நாட்டின் பிற ஐடி நிறுவனங்களைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்து வருகிறது டிசிஎஸ் நிறுவனம். கொரோனா காலகட்டத்திலும் டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியில் சிறந்து விளங்கும் ஊழியர்களுக்கு இரண்டு இலக்கு ஊதிய உயர்வையும், பிற ஊழியர்களுக்கான வழக்கமான ஊதிய உயர்வையும் இம்மாதம் மாதம் முதல் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களிடம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கட் இதுகுறித்து "ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் செய்து வருவதுபோல், இந்த ஆண்டும் எங்கள் ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். டாப் பர்பாமென்ஸ் ஊழியர்கள் இரண்டு இலக்கு சம்பள உயர்வைப் பெறுவார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை தவிர்த்துப் பிற ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் 4.5% முதல் 7% வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு சுமார் 40,000 பேரை புதிதாக பணியில் அமர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதில் பெரும்பாலானோர் முந்தைய நிதியாண்டின் சுழற்சிகளில் இருந்து ஏற்கனவே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More : உள்ளாடைகளை வேலியில் தொங்கவிடும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?

Advertisement