முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு’..!! இடி மின்னலுடன் 27 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

05:58 PM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு கனமழையும், கடலோரப் பகுதிகளில் பலத்த மழை தற்போது பெய்து வருகிறது. மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், பனையூர், சூனாம்பேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Tags :
இடி மின்னல்தமிழ்நாடுமழைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article