’மார்ச் மாதம் கைக்கு வந்துரும்’..!! புதிய வாக்காளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தேர்தல் ஆணையம்..!!
10:54 AM Dec 12, 2023 IST
|
1newsnationuser6
Tags :
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு அறிவித்துள்ளார். தற்போதும் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஆனால், அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் பரிசீலிக்கப்படும். தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு மார்ச் மாதம் வழங்கப்படும். இது தவிர ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர் புதிய அட்டை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Next Article