For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நான் சாகல..  ஊடக பண்புதான் இறந்துவிட்டது!" லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் கதறல்!!

It has been revealed that Sri Lankan radio announcer Abdul Hameedu, who hosted Lalitha's song-to-singing show, has passed away, as a rumor spread wildly on social media
10:25 AM Jun 25, 2024 IST | Mari Thangam
 நான் சாகல    ஊடக பண்புதான் இறந்துவிட்டது   லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் கதறல்
Advertisement

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்தவர் அப்துல் ஹமீது. இவரின் தரணித்துவமான குரலும், அழுத்தம் திருத்தமான பேச்சும் மிகவும் பிரபலம். வானொலியை தொடர்ந்து சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 'லலிதாவின் பாட்டு பாட்டு' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்துல் ஹமீது.

Advertisement

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அப்துல் ஹமீத். இவர் சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்த சூழலில் அப்துல் ஹமீத் திடீரென உயிரிழந்து விட்டதாக செய்திகள் பரவின.

அப்துல் ஹமீத் உடல்நல குறைவால், காலமானதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவிய நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தான் உயிருடன் இருப்பதாகவும் தன்னைக் குறித்து வந்த செய்தி வதந்தி என்றும் அப்துல் ஹமீது மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று முறை அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் மீண்டும் அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தான் இறக்கவில்லை எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகு பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்து விட்டது என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Read more ; கள்ளச்சாராய மரணம்..!! மீண்டும் மறுப்பு..!! அதிமுக அட்ராசிட்டி..!! கடுப்பான சபாநாயகர்..!! அதிரடியாக வெளியேற்றம்..!!

Tags :
Advertisement