For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆசையாக சாப்பிட்ட மட்டன் குழம்பு.. திடீரென மயக்கம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!!

It has been reported that 4 members of the same family have died after eating goat meat in Raichur, Karnataka
12:32 PM Aug 03, 2024 IST | Mari Thangam
ஆசையாக சாப்பிட்ட மட்டன் குழம்பு   திடீரென மயக்கம்   ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
Advertisement

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பீமன் (வயது 60) ஆட்டிறைச்சி வாங்கிவந்து குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்டவுடன் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பீமன், மனைவி, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், பீமன் குடும்பத்தினர் சாப்பிட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். உயிரிழந்தோரின் உடல்கள் RIMS மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள இருவர் நலம் பெற்ற பின்னரே.. இது தற்கொலையா? என்பது தெரியவரும். தற்போது வழக்குப்பதிவு செய்த போலீசார் இறப்புக்கு காலாவதியான இறைச்சி காரணமா? அல்லது உணவில் வேறு ஏதேனும் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Read more ; Wayanad Landslide | நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..!!

Tags :
Advertisement