முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே...! நாளை பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்குமா...? அரசு முக்கிய அறிவிப்பு...!

It has been informed that the deed registration offices will function tomorrow in view of the increase in the number of people
05:55 AM Aug 02, 2024 IST | Vignesh
Advertisement

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறை தலைவர் தினேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மங்களகரமான நாட்களில் அசையா சொத்துகள் குறித்த ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு, பொது விடுமுறை நாளான ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை (நாளை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆவணப் பதிவு மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisement

எனவே, காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை பதிவு அலுவலகங்கள் செயல்படும். அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்று மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு, விடுமுறை நாள் ஆவணப் பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Aadi perukuRegister officetn government
Advertisement
Next Article