முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

90’s நடிகை வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..? இந்த தவறை நீங்களும் பண்ணிடாதீங்க..!! நடிகை மந்த்ரா சொன்ன பரபரப்பு தகவல்..!!

Actress Mandira, who acted with celebrities like actor Ajith and Vijay, has spoken about her film career and family life in an interview. You can see about it in this post.
06:56 PM Oct 19, 2024 IST | Chella
Advertisement

நடிகர் அஜித், விஜய் போன்ற பிரபலங்களோடு நடித்த நடிகை மந்த்ரா தன்னுடைய சினிமா வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

90s காலகட்டத்தில் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பெயர் சொன்னதும் டக்கென்று மனதிற்குள் வரும் அளவிற்கு ஆழமாக பதிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகை மந்திரா. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். பின்னர், சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்போது தெலுங்கில் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் அவர் பேசுகையில், ”எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. புகழின் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் தேவையா என்று சிலர் கேட்டார்கள். ஆனால், திருமண வாழ்க்கைக்கு சரியான துணையை பார்த்துவிட்டால், உடனே திருமணம் செய்வதில் தப்பு இல்லை என்று எனக்கு தோன்றியது. என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு 10 வருடங்களாக நான் குழந்தை இல்லாமல் இருந்தேன். முதல் 3 வருடங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று தள்ளிப் போட்டோம். ஆனால், அதன் பிறகு நாங்கள் நினைத்த நேரத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. 10 வருடங்களுக்கு பிறகு எனக்கு மகள் பிறந்தாள். இப்போது என்னுடைய மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். அதனால் திருமணம் முடிந்தால் உடனே குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது உண்மைதான்.

யாரும் நான் செய்த தப்பை செய்யக்கூடாது. என்னுடைய அனுபவத்தில் இதை சொல்கிறேன். கல்யாணத்திற்கு பிறகு குழந்தை இல்லை என்பதால் வருத்தமாக இருக்கும். அப்போது நான் என்னுடைய கணவர் ஊருக்கு தான் செல்ல விரும்புவேன். என்னுடைய கணவர் ஊர் ஆந்திராவில் ஒரு கிராமம். அங்கு செல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சிட்டியில் பிறந்து சிட்டியில் வளர்ந்ததால், எனக்கு கிராமத்து மனிதர்களும், அவர்களுடைய அன்பும் வித்தியாசமாக இருந்தது.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி விட்டதால், நான் நடிப்பை விட்டு கொஞ்ச நாள் விலகி இருந்தேன். பிறகு என்னுடைய மகள் பள்ளிக்கு செல்ல தொடங்கிய பிறகுதான் நான் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிக்க வந்திருக்கிறேன். தமிழில் எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read More : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு..!! எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..?

Tags :
10 ஆண்டுகள்குடும்ப வாழ்க்கைகுழந்தைசினிமா வாழ்க்கைநடிகை மந்த்ரா
Advertisement
Next Article