முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாவித்ரி வாழ்க்கையில் நடந்த துயரங்களுக்கு ஜெமினி கணேசன் காரணமா..? உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை..!!

Savitri blamed Gemini Ganesan for the miseries in her life. This is completely wrong.
12:28 PM Sep 21, 2024 IST | Chella
Advertisement

தமிழ் திரையுலகில் தனக்கென எப்போதும் தனி இடத்தை தக்க வைத்துள்ளவர் நடிகை சவுக்கார் ஜானகி. இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்து 72 ஆண்டுகள் கடந்து விட்டது. இவர், தமிழ்நாட்டின் 3 முதல்வர்களுடனும் இணைந்து திரையுலகில் பணியாற்றியவர். இவர், 3 குழந்தைக்கு தாயான பின்பு தான் சினிமாவில் நடக்கவே வந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தலைமுறைகள் கடந்த நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

Advertisement

15 வயதில் ரேடியோ அறிவிப்பாளராக இருந்த ஜானகியை தேடி சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால், இவரது குடும்பத்தினர் சினிமா வேண்டாம் எனக்கூறி அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். பின் குடும்ப வறுமை அவரை வாட்ட கைக்குழந்தையுடன் சினிமாவில் வாய்ப்பு தேடினார். அப்போது கிடைத்த வாய்ப்பு தான் நடிகர் என்.டி.ராமாராவ் உடனான சவுக்கார் திரைப்படம். இப்படத்தில், அறிமுகமானதாலே இவருக்கு சவுக்கார் ஜானகி என்ற பெயர் வந்தது.

அதைத்தொடர்ந்து நடிகை, நகைக்சுவை, குணச்சித்திரம் என நடிப்பின் அனைத்து ஏரியாவிலும் தடம் பதித்தார். இவரின் நடிப்பை பாராட்டி பல விருதுகளை இவரைத் தேடி வந்தன. இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரி பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ”நான் நடிக்க வந்த புதிதில் குடும்ப வறுமை காரணமாக படப்பிடிப்பின் போதே மயங்கி விழுந்துவிட்டேன். பின் இதுகுறித்து விசாரித்த ஜெமினி கணேசன், எனது சம்பளப் பணத்தை மொத்தமாக கொடுத்து உதவுமாறு அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி. உங்களுக்கு நல்ல முகம் உள்ளது. எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வருவீர்கள் என்று ஊக்கமளித்தார். சில ஆண்டுகளுக்கு முன் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஒன்று வெளியானது. அதில், சாவித்ரி வாழ்க்கையில் நடந்த துயரங்களுக்கு ஜெமினி கணேசனை காரணமாக கூறியிருப்பர். இது முற்றிலும் தவறானது. ஜெமினி கணேசன் அப்படியானவர் கிடையாது. அவரிடமும் சில பலவீனங்கள் உண்டு. இங்கு பலவீனம் இல்லாதவர் யாருமில்லை. தற்போதுள்ள அரசியல்வாதிகள் குறித்து பயோபிக் எடுத்தால் நாறிப் போய்விடும்.

மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வினுடன் நான் எவடே சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது, அவர் சாவித்ரி குறித்து கேட்டுக்கொண்டே இருப்பார். பிறகு தான் தெரிந்தது அவர் சாவித்ரி குறித்து படம் இயக்குகிறார் என்று. இப்படத்தில் ஜெமினி கணேசன் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல. சாவித்ரி குறித்தும் தவறான படம் வந்துள்ளது. சாவித்ரி பயோபிக் படத்தில் தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும், அத்திரைப்படத்தை பார்க்குமாறும் என்னை வற்புறுத்தினர். ஆனால், தவறான கருத்துகளை பதிவு செய்துள்ள இப்படத்தை இத்திரைப்படத்தை நான் பார்க்க மாட்டேன். அந்தத் திரைப்படம் தேவையே இல்லாதது என கூறிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More : இன்று புரட்டாசி சனிக்கிழமை..!! பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

Tags :
சவுக்கார் ஜானகிசாவித்ரிஜெமினி கணேசன்
Advertisement
Next Article