முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

படிக்க சொன்னது ஒரு குத்தமா?… வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்!

09:00 AM Dec 06, 2023 IST | 1newsnationuser3
Advertisement

விருதுநகரில் 2 மாணவர்கள் வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள திருத்தங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதார ஆசிரியராக கடற்கரை ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் சரியாக படிக்காமலும், வகுப்பறையில் சக மாணவர்களுடன் சேர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இந்நிலையில், அப்படி அராஜகம் செய்த இரண்டு மாணவர்களை ஆசிரியர் கடற்கரை ராஜ் அண்மையில் கூப்பிட்டு கண்டித்துள்ளார். அப்போது அரையாண்டு தேர்வு நெருங்கவுள்ளதால் ஒழுங்காக படிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.

சக மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் தங்களுக்கு அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆசிரியரின் தலையில் பலத்த வெட்டுக்காயம் விழுந்து அவர் கீழே விழுந்தார். இதையடுத்து, அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடி இரண்டு மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
classroomஆசிரியரை வெட்டிய மாணவர்கள்விருதுநகரில் பரபரப்பு
Advertisement
Next Article