முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2025 அக்டோபர் 1 முதல் மோட்டார் வாகன ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவது கட்டாயம்...!

06:48 AM Dec 12, 2023 IST | 1newsnationuser2
Advertisement

இந்தியாவில் 2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பை நிறுவுவதை கட்டாயமாக்கி 2023, டிசம்பர் 8 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. குளிர்சாதன அமைப்பு பொருத்தப்பட்ட ஓட்டுநர் பகுதியின் செயல்திறன் சோதனை ஐ.எஸ் 14618: 2022 -ன் படி, அவ்வப்போது திருத்தப்படும்.

இந்த அறிவிப்பின்படி, 2025 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு டிரைவ்-அவே சேசிஸ் வடிவில் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகையின் எந்தவொரு வாகனமும், ஐஎஸ் 14618:2022 -ன் படி குளிர்சாதன அமைப்பு வகை அங்கீகரிக்கப்பட்ட உபகரணத் தொகுப்பை வழங்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2023, ஜூலை 10 அன்று சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags :
Air Coolercentral govtgovernmentVechile
Advertisement
Next Article