For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு..!! 9,800 அடி உயரம்.!! 11 பேர் உயிரிழப்பு..!!

11:28 AM Dec 04, 2023 IST | 1newsnationuser6
இந்தோனேசியா எரிமலை வெடிப்பு     9 800 அடி உயரம்    11 பேர் உயிரிழப்பு
Advertisement

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடாகும். ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் அதிக எரிமலைகளை கொண்ட பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடக்கும்.

Advertisement

அந்தவகையில், இந்தோனேசியாவில் டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மராபி எரிமலை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சமீபத்திய முன்னேற்றங்களின்படி, இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். மவுண்ட் மராபி எரிமலை வெடிப்பில் இறந்த 11 பேர் அனைவரும் மலையேறுபவர்கள். மராபி மலை வெடிப்பு 3,000 மீட்டர் (9,800 அடி) உயரத்திற்கு மேல் வெள்ளை மற்றும் சாம்பலை வீசியதில், 11 பேரும் உயிரிழந்தனர்.

Tags :
Advertisement