For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"இந்தியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது" –பிரதமர் மோடி

02:51 PM Apr 10, 2024 IST | Mari Thangam
 இந்தியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது  –பிரதமர் மோடி
Advertisement

வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Advertisement

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று (ஏப். 9) சென்னை வந்தார். அதனைத்தொடர்ந்து இன்று வேலூர் வந்த பிரதமர் மோடி, பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கே.பாலு, செளமியா அன்புமணி, கே.எஸ்.நரசிம்மன், அஸ்வத்தாமன், கணேஷ்குமார் ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் புத்தாண்டில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது. வரலாறு, புராணம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வேலூரை நான் வணங்குகிறேன். முருக பெருமானை நான் வணங்குகிறேன்.

2014-க்கு முன்பு உலகம் இந்தியாவை கேவலமாக பார்த்தது. செய்தித்தாள்களில் தினந்தோறும் ஊழல் செய்திகள் வந்தன. உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது. விண்வெளி துறையில் பாரதத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.

ஹிந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். திமுகவும் சநாதானத்தை அழிப்பேன் என்று பேசியுள்ளது. பெண்களுக்கு மரியாதை அளிக்காத கட்சி திமுக. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எப்படி அவமானப்படுத்தினார்கள் என்று நமக்கு தெரியும். திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது தான். நாங்கள் பெண்களுக்கான மரியாதையை மீட்டுக் கொடுப்போம்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை இலங்கையில் இருந்து பாஜக  மீட்டு கொண்டு வந்தது. கச்சத்தீவை இலங்கைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தாரை வார்த்தன. மீனவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் துரோகம் செய்கிறது. கச்சத்தீவை யாருக்காக அவர்கள் இலங்கைக்கு கொடுத்தனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் காங்கிரசும், திமுகவும் அதுபற்றி பேசுவது இல்லை” எனக் குறிப்பிட்டார்.

Tags :
Advertisement