For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெஞ்சே பதறுது.. 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! முதுகில் மிதி.. செங்கல் கொண்டு எறிந்து கொலை முயற்சி!!

In Uttar Pradesh, a Dalit girl was gang-raped by two men and tried to kill her with a brick.
06:57 PM Sep 09, 2024 IST | Mari Thangam
நெஞ்சே பதறுது   14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்     முதுகில் மிதி   செங்கல் கொண்டு எறிந்து கொலை முயற்சி
Advertisement

உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமியை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செங்கல்லால் தாக்கிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேர் சேர்ந்து, 14 வயது தலித் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தில், இரவு 8 மணியளவில் தனியாகச் சென்றுக்கொண்டிருந்த போது என்னை பின் தொடர்ந்து வந்தார்கள். பின்னர் வலுக்கட்டாயமாக இழுத்து, முட்புதருக்குள் அழைத்துச் சென்று என்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள். சாதி குறித்து இழிவாகப் பேசினார்கள். அதுமட்டுமின்றி என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலே செங்கல்லைக் கொண்டு தாக்கினார்கள். முதுகில் பலமுறை என்னைத் தாக்கினார்கள். நான் அசைவின்றி இருந்ததால் இறந்ததாக நினைத்து என்னை விட்டுவிட்டார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பித்துச் சென்றார்கள்" என்று சிறுமி கூறினார்.

பின்னர், சிறுமிக்கு சுய நினைவு திரும்பியவுடன் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பக்‌ஷிதா கா தாலாப் பகுதியில் உள்ள கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். மற்றொரு நபரின் பெயர் கண்டறியப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பக்‌ஷிதா கா தலாப் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை நடந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். எஸ்சி/எஸ்டி சட்டத்துடன் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல டிசிபி அபிஜித் சங்கர் தெரிவித்துள்ளார்.

Read more ; கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

Tags :
Advertisement