For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொதுமக்கள் கவனத்திற்கு...! வரும் 29-ம் தேதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்...! ஆட்சியர் அறிவிப்பு...?

06:00 AM Nov 26, 2023 IST | 1newsnationuser2
பொதுமக்கள் கவனத்திற்கு     வரும் 29 ம் தேதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்     ஆட்சியர் அறிவிப்பு
Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்" நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் "எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்" நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29-11-2023 புதன்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.

Advertisement

எனவே, எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement