For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதுரையில் வேலை.. ரூ.35,000 வரை மாதச் சம்பளம்..!! No எக்ஸாம்.. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

In Madurai district, notification has been released for the vacant post of District Resource Instructor
04:56 PM Sep 06, 2024 IST | Mari Thangam
மதுரையில் வேலை   ரூ 35 000 வரை மாதச் சம்பளம்     no எக்ஸாம்    ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பணியிடங்களுக்கான தகுதிகள்:

மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) - ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவராகவும், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு மேல் முன் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாய்மொழி மற்றும் எழுத்துத் திறன் பெற்றவராகவும், கணினி இயக்கத்தில் போதுமான திறன் உடையவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம் : இப்பணிக்கு மதிப்பூதியம் குறைந்தபட்சம் 20,000 முதல் 35,000 வரை பணித்திறனுக்கு ஏற்றவாறு வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?  https://madurai.nic.in/ என்ற வலைதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திட்ட மற்றும் துணை இயக்குநர், மாவட்ட இணை மேலாண்மை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மதுரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ என்ற 10.9.2024 பிற்பகல் 3 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாகவோ, நாள் கடந்த வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படாது. மேலும் விவரங்களுக்கு 9442748405 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read more ; உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா..? அப்படினா கண்டிப்பா இதை சாப்பிடாதீங்க..!!

Tags :
Advertisement