For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாலியல் தொல்லை கொடுத்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி..!! அதிரவைக்கும் பின்னணி..

In Chennai, a cleaning lady strangled her husband with a rope to death
07:01 PM Aug 22, 2024 IST | Mari Thangam
பாலியல் தொல்லை கொடுத்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி      அதிரவைக்கும் பின்னணி
Advertisement

சென்னை பல்லவன் சாலை காந்தி நகரில் வசிப்பவர் நாகம்மாள். இவருக்கு வயது 35. இவரது கணவர் ஆட்டோ டிரைவர் சத்யராஜ். இருவரும் சமீக காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து தன்னை விட சிறியவரான மணிவண்ணன்(28) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாகம்மாள் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

Advertisement

மணிவண்ணன் - நாகம்மாள் இருவருக்கும் மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. பணி முடிந்து வீடு திரும்பியதும் இரவில் இருவரும் வீட்டிலே மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சம்பவத்தன்று இருவரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். பின்னர் மணிவண்ணன் நாகம்மாளை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு நாகம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் நாகம்மாளை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள் மணிவண்ணனைன் தாக்க ஆயுதம் தேடியுள்ளார். பினனர் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து மணிவண்ணை கொலை செய்துவிட்டு, தனது தங்கைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடம் வந்த தந்கையின் கணவர் தனது இருசக்கர வாகனத்தில் மணிவண்ணனை ஏற்றி ஓமாந்தூரார் தோட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே மணிவண்ணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிவண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகம்மாளை கைது செய்தனர். மேலும் போலீசார் மணிவண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தனது கணவனை கொலை செய்து விட்டதாக போலீசார் விசாரணையில் நாகம்மாள் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Read more ; தவெக கொடி அறிமுக விழாவில் எழுந்த சர்ச்சை.. ஃபைன் கட்டிய தவெக தலைவர் விஜய்..!!

Tags :
Advertisement