முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’சுயமரியாதையை பற்றி பேச ஆரம்பித்தால் எந்த தயாரிப்பாளராலும் படம் எடுக்க முடியாது’..!! மணிமேகலையை வறுத்தெடுக்கும் ரவீந்தர்..!!

No one here talks about Manimekalai's family or her past life. But now Priyanka's personal life has become a topic of discussion.'
01:58 PM Sep 21, 2024 IST | Chella
Advertisement

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை - பிரியங்கா விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து, திரைப்பட விமர்சகரும், தயாரிப்பாளருமான ரவீந்திரன் கூறுகையில், ”பிரச்சனை என்னவென்று யாருக்கும் தெரியாது. தன் சுயமரியாதையை சமரசம் செய்து கொண்டு நிகழ்ச்சியை தொடர முடியாது என்று கூறிவிட்டு மணிமேகலை வெளியேறியுள்ளார். ஒரு வீடியோவில், அவர் பேசும்போது "முன்னாள் தொகுப்பாளர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதில் பிரியங்காவைப் பற்றி பேசுவது போல் தெரிகிறது. அதை ஏன் வெளிப்படையாகச் சொல்லக்கூடாது?

Advertisement

நான் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் குறித்த எனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். மணிமேகலை பிரியங்காவின் குணாதிசயங்கள் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கூட கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து மணிமேகலை அறிக்கை வெளியிட வேண்டும். சுயமரியாதையை பற்றி பேச ஆரம்பித்தால் எந்த தயாரிப்பாளராலும் படம் எடுக்க முடியாது.

பிரியங்கா யார் என்று பிரியங்கா குடும்பத்தினருக்கு தெரியும், அவருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு தெரியும். இந்தச் சூழலை முதிர்ச்சியில்லாமல் கையாண்டிருக்கிறார் மணிமேகலை. இங்கு யாரும் மணிமேகலையின் குடும்பம் பற்றியோ, அவரது கடந்த கால வாழ்க்கையைப் பற்றியோ பேசவில்லை. ஆனால் தற்போது பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையே விவாதப் பொருளாக மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Read More : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! பல நாட்களாக தந்தை, மகன் செய்த கொடூர செயல்..!! சிக்கியது எப்படி..?

Tags :
குக் வித் கோமாளிபிரியங்காமணிமேகலைவிஜய் டிவி
Advertisement
Next Article