For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கெட்ட சக்தி, பண கஷ்டம் தீர உங்கள் வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும்..!! இனி பக்கத்துலயே நெருங்காது..!

07:01 AM Apr 13, 2024 IST | Chella
கெட்ட சக்தி  பண கஷ்டம் தீர உங்கள் வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும்     இனி பக்கத்துலயே நெருங்காது
Advertisement

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் உங்களை விட்டு நீங்கி விடும்.

Advertisement

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி, பில்லி, சூனியம் போன்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது. நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால், தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய செயல் செய்யப்படுகிறது. அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் வெளிப்பாடே கண் திருஷ்டி ஆகும். கண் திருஷ்டியால் வீட்டில் சோக நிகழ்வுகள், பணக் கஷ்டம், தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த தீய சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள வாழ்வில் முன்னேற்றம் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றிலாம். அதாவது, வீட்டில் அதிகளவு எதிர்மறை ஆற்றல் இருந்தால், எந்த ஒரு நல்ல நிகழ்வும் நடக்காது. இதில் இருந்து காத்துக் கொள்ள வீட்டில் ஒரு தூபம் போட்டு வாருங்கள். இதற்கு ஏலக்காய், வெண் கடுகு, கல் உப்பு இருந்தாலே போதும்.

இந்த பொருட்களை சம அளவு எடுத்து தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டவும். இந்த 3 பொருட்களும் கெட்ட ஆற்றலை உள் ஈர்த்து நல்ல ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவை. இந்த தூபத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகீறது. கண் திருஷ்டி, பில்லி, சூனியம் உள்ளிட்டவையும் உங்களைவிட்டு அடியோடு அழியும்.

Read More : ’காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருக்கா’..? அப்படினா உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

Advertisement