முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கண் திருஷ்டியில் இருந்து ஈசியா தப்பிக்க இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும்..!! வீட்டிலேயே செய்யலாம்..!!

02:13 PM Jan 26, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பிடிக்காதவர்கள் பொறாமைப்படுவது என்பது எங்கும் நிகழக்கூடிய ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு நம் வளர்ச்சியை பார்த்து பலரும் பொறாமைப்படுவதையும், நாம் வளர்ச்சியடையக்கூடாது என்று கருதுவதையும் நமக்கு கண் திருஷ்டி என்று கூறுவார்கள். இந்த நிலையில், இதுபோன்ற கண்திருஷ்டி நீங்க சில எளிய பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இதற்கு வீட்டில் உள்ள கடுகு, மிளகு மற்றும் எலுமிச்சம்பழத்தை எடுத்துக்கொள்ளவும். கூடவே நல்லெண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில், வீட்டில் உள்ள சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில், கடுகை முக்கால் பங்கு போட்டுக் கொள்ளவும். இப்போது, அதில் 10 மிளகை சேர்க்கவும். இப்போது, அதில் 1 எலுமிச்சம் பழம் போடவும். இப்போது, அந்த கிண்ணத்தை வீட்டில் அனைவரும் பார்க்கும்படி வைக்க வேண்டும்.

இந்த கிண்ணத்தை வீட்டில் வைத்த ஒரு நாள் கழித்து அதற்கு அடுத்த நாள், அதாவது திங்கட்கிழமை வைக்கிறீர்கள் என்றால் புதன் கிழமை இப்போது கிண்ணத்தில் உள்ள எலுமிச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதை இரண்டாக வெட்டி வலது, இடது என இரண்டு புறமும் தூக்கி வீசவும். பின்னர், கடுகு மற்றும் மிளகை ஒரு வெள்ளை நிற கதர் துணியில் போட்டு நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ளவும். இதை வீட்டு வாசலில் வைக்கவும். இதில் நல்லெண்ணெய் ஊற்றி அதை எறிய விட வேண்டும். அப்போது, மிளகும், கடும் நன்றாக பொரியும். அவ்வாறு பொரியும்போது நம் வளர்ச்சி பிடிக்காதவர்களின் கண் திருஷ்டியும் பொரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. கண் திருஷ்டி போன்றவை இருந்தாலும் நம் உழைப்பின்போதும், இறைவன் மீதும் நம்பிக்கை வைத்து நமது செயலில் கவனம் செலுத்தி, முயற்சிப்பதே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
எலுமிச்சைகடுகுகண் திருஷ்டிபரிகாரம்மிளகு
Advertisement
Next Article