For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Annamalai: காங்கிரஸ்-திமுக ஆட்சியில் இருந்தால் காவிரி நீர் கிடைக்காது!... அண்ணாமலை தாக்கு!

06:14 AM Mar 31, 2024 IST | Kokila
annamalai  காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்தால் காவிரி நீர் கிடைக்காது     அண்ணாமலை தாக்கு
Advertisement

Annamalai: திமுகவிற்கு வாக்களிப்பது பாவம் செய்வதற்கு சமம் என்று தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

தஞ்சாவூர் திருவையாறில் பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணியில் ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை, காவிரியில் முறையாக தண்ணீர் வர வேண்டுமானால் காங்கிரஸ், தி.மு.க., அதிகாரத்துக்கு வரக்கூடாது. விவசாயிகள் தி.மு.க.,வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் என அண்ணாமலை சொல்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தால் காவிரியில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று விமர்சித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நீரை பெற்று தருவோம் என நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுவதே திமுகவின் செயல் என குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் பா.ஜ., ஆட்சியில் இருந்த வரை காவிரி நீரை யாரும் தடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீரைத் தடுப்பது மட்டுமல்லாமல், மேதாதுவில் அணையைக் கட்டுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அணையைக் கட்ட அனுமதி கிடையாது என மத்திய அரசு உறுதியாகக் கூறிவிட்டது என்று கூறினார்.

Readmore: பரபரப்பு…! TASMAC கடைய எப்ப மூட போறீங்க…? உதயநிதியை சுற்றி வளைத்த பெண்கள்…!

Tags :
Advertisement