For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”யாராவது எழுந்து போனா ரத்தம் கக்கி சாவீங்க”..!! சாபம்விட்ட செல்லூர் ராஜூ..!! அதிர்ந்துபோன அதிமுகவினர்..!!

04:23 PM Mar 27, 2024 IST | Chella
”யாராவது எழுந்து போனா ரத்தம் கக்கி சாவீங்க”     சாபம்விட்ட செல்லூர் ராஜூ     அதிர்ந்துபோன அதிமுகவினர்
Advertisement

"நான் பேசும்போது நடுவில் யாராவது எழுந்து போனா ரத்தம் கக்கி சாவீங்க" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாபம் விட்டதால் கூட்டத்திற்கு வந்தவர்கள் பீதியடைந்தனர்.

Advertisement

தமிழ்நாடு, புதுச்சேரியில் 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது அதிமுக. மொத்தமாக 35 வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றனர். மதுரை லோக்சபா தொகுதியில் டாக்டர் சரவணன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுரையில் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசிக் கொண்டிருந்தபோது அதிமுகவினர் சிலர் கூட்டத்தில் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து, கூட்டத்தில் இருந்து எழுத்த தொண்டர்களை அமருமாறு நிர்வாகிகள் மேடையில் இருந்து அறிவுறுத்தினர். இதையடுத்து, பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "நான் பேச துவங்குகிறேன். கூட்டத்தில் நான் பேசும்போது இடையில் யாரும் பேசக்கூடாது. நடுவுல எழுந்து போகக்கூடாது. போனா வீடு போய்ச் சேர்வதற்குள் ரத்தம் கக்கி சாவீங்க. 5 நிமிடம் டைம் தருகிறேன். அப்போது எழுந்து போகலாம். நான் ஒரு மந்திரம் போட்டு விட்டுத் தான் கூட்டத்திற்கு வந்தேன்" என கலகலப்பாகப் பேசினார்.

இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் செல்லூர் ராஜூ விட்ட சாபத்தால் முதலில் பீதி அடைந்து, பின்னர் நகைச்சுவையை உணர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர். வேட்பாளர் டாக்டர் சரவணனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பொதுக் கூட்டங்களிலும் சரி, பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி, ஜாலியாக கமெண்ட் அடிப்பது செல்லூர் ராஜூவின் வழக்கம். அந்தவகையில், தேர்தல் நெருங்கும் பரபர சூழலிலும், கூட்டங்களில் நகைச்சுவை கமெண்ட்களை அடித்து அதிமுகவினரை குதூகலப்படுத்தி வருகிறார் செல்லூர் ராஜூ.

Read More : Ram Temple | அயோத்தி ராமர் கோயிலில் துப் பாக்கிச்சூடு..!! ஒருவர் கவலைக்கிடம்..!! பெரும் பரபரப்பு..!!

Advertisement