For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இனி அதிமுகவின் பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன்'..!! ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம்..!!

02:56 PM Nov 30, 2023 IST | 1newsnationuser6
 இனி அதிமுகவின் பெயர்  கொடியை பயன்படுத்த மாட்டேன்      ஓ பன்னீர்செல்வம் உத்தரவாதம்
Advertisement

மறு உத்தரவு வரும் வரை அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளார்.

Advertisement

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓபிஎஸ் எதிராக எடப்பாடி பழனிசாமி தொடந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் இனிமேல் அதிமுகவின் கொடி, சின்னத்தை அவர் பயன்படுத்த மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement