முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்’..!! ’ஒரு டைம் அது பண்ணலாம்’..!! பெண் விமானியை பலாத்காரம் செய்து வீடியோ..!! கோவையில் ஷாக்..!!

The shocking incident of the rape of a female pilot in Goa has been shocked.
10:37 AM Sep 28, 2024 IST | Chella
Advertisement

கோவையில் பெண் விமானியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வருபவர் 35 வயது பெண். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர், அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். அப்போது அவருக்கு கோவையை சேர்ந்த ஆனந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்ததால், பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தராஜ் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், ஆனந்தராஜ் அந்த பெண்ணின் தந்தையிடம் சென்று, ''நான், எனது மனைவியை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பிள்ளேன். இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருவருக்கும் விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும். அதன்பின்பு உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும் ஆனந்தராஜூம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த சூழலில், அந்த பெண் ரூ.16 லட்சத்தில் புதிய கார் ஒன்றை வாங்க முடிவு செய்திருக்கிறார். அந்த பணத்தை வாங்கிய ஆனந்தராஜ், கூடுதலாக பணம் போட்டு சொகுசு கார் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால், அவர் பணத்தை வாங்கிக் கொண்டு கார் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். பின்பு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் ஆனந்தராஜ் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திருமணம் செய்வதாக உறுதி அளித்து, உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால், அப்பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால், அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். அதன் பிறகு அந்த பெண் ஆனந்தராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர் திருமணம் செய்ய மறுத்து ஆபாச வீடியோவை காட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இன்று முதல் விடுமுறை..!! சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Tags :
கோவைதிருமணம்பாலியல் பலாத்காரம்பெண்
Advertisement
Next Article