முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’வி.சாலை எல்லையில் என் இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்’..!! ’பத்திரமாக வாருங்கள்’..!! தவெக தலைவர் விஜய் அறிக்கை..!!

As the first state convention of Tamil Nadu Victory Kazhagam is going to be held in Villupuram Vikravandi on 27th, party leader Vijay has written a letter today.
10:43 AM Oct 25, 2024 IST | Chella
Advertisement

விழுப்புரம் விக்கிரவாண்டியில், வரும் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் விஜய் இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

Advertisement

அந்த கடிதத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. வணக்கம்.!! நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் 3-வது கடிதம் இது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

இந்த திருவிழாவை கொண்டாட வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதி பூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Read More : ரூ.59,000-ஐ நெருங்க காத்திருக்கும் தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Tags :
தமிழக வெற்றிக் கழகம்முதல் மாநாடுவிஜய்
Advertisement
Next Article