For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடனாக கொடுத்தேன்”..!! இதுதான் வரலாறு..!! ஓபிஎஸ் பரபரப்பு தகவல்..!!

05:13 PM Dec 26, 2023 IST | 1newsnationuser6
”ஜெயலலிதாவுக்கு ரூ 2 கோடி கடனாக கொடுத்தேன்”     இதுதான் வரலாறு     ஓபிஎஸ் பரபரப்பு தகவல்
Advertisement

சென்னையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அதே நேரத்தில், கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதலமைச்சராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான்.

Advertisement

ஜெயலலிதா என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்தபோது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் கட்சியின் நிதி 4 கோடி ஆனது. ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து, எனக்கு தனிப்பட்ட முறையில் நிதி சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகள் என் மீது இருப்பதால், வழக்கறிஞர்களுக்கு பணம் தர வேண்டும் என்று கட்சி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார்.

உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் 2 கோடி ரூபாயை வழங்கினேன். அந்த பணத்தை ஒரே மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு. இன்றைக்கு எங்களை எல்லாம் வம்படியாக வெளியேற்றி விட்டு அவர்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள்" என பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

Tags :
Advertisement