பரபரப்பு...! உங்க மன்னிப்பை ஏற்க முடியாது...! பாபா ராம்தேவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்....!
பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் ஆகியோரது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் தாங்கள் கண்டுபிடித்த மருந்து குறித்த மிக தவறான விளம்பரங்களை மேற்கொண்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்; பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் பொழுது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள் அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது...? உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் எந்தெந்த அரசு அதிகாரிகள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லையோ அவர்கள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் செயல்பாடுகள் வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமை என்பதைத்தான் நாங்கள் கருதுகிறோம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீறக் கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பாபா ராம்தேவ் சமர்ப்பித்த 2-வது பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை வேண்டுமென்றே பாபா ராம்தேவ் மீறியுள்ளதால் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் நிராகரித்தது.