For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’நான் எப்போதும் மருமகன் ரவிக்குத்தான் ஆதரவு’..!! ’ஆர்த்தி சின்ன விஷயத்துக்கு கூட’..!! ஓபனாக பேசிய மாமியார்..!!

An old interview given by Jayam Ravi's mother-in-law Sujatha is now going viral.
05:10 PM Sep 11, 2024 IST | Chella
’நான் எப்போதும் மருமகன் ரவிக்குத்தான் ஆதரவு’     ’ஆர்த்தி சின்ன விஷயத்துக்கு கூட’     ஓபனாக பேசிய மாமியார்
Advertisement

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜெயம் ரவி எடுத்தது தனிப்பட்ட முடிவு. அவரிடம் பேசுவதற்கு பல முறை முயற்சித்தேன். ஆனால், அதற்கான வாய்ப்பை அவர் கொடுக்கவில்லை. நானும், எனது இரண்டு குழந்தைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் என்று இன்றைய தினம் ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement

இப்படியான நிலையில், ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா இதுகுறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அவர், யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், ”ஜெயம் ரவியை காதலிக்கிறேன் என்று ஆர்த்தி என்னிடம் சொன்னபோது உண்மையில் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனென்றால், அவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம். நாங்கள் அப்படி இல்லை. அப்படி இருக்கும்போது இவர்கள் இருவரும் எப்படி கனெக்ட் செய்துகொண்டார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் ஆர்த்தியும், ரவியும் நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டபோது காதல் உருவானது தெரிந்தது.

ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே சண்டை நடக்காமல் இருந்ததே இல்லை. அவர்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் வரும். அப்போது ரவிக்குத்தான் நான் ஆதரவு கொடுப்பேன். அங்குதான் மேற்கொண்டு பிரச்சனையே ஏற்படும். ஆர்த்தி என்னிடம் வந்து, நீ உனது மாப்பிள்ளைக்கு ஆதரவு கொடுக்கிறாயா என்று கேட்பார். ரவி கொஞ்சம் நிதானமானவர். ஆனால், ஆர்த்தி அப்படி இல்லை. சின்ன விஷயத்துக்குக்கூட உடனே டென்ஷன் ஆவாள்.

அதனால் நான் ரவிக்கு சப்போர்ட் செய்வேன். அப்போது ஆர்த்திக்கும் எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எனது வீட்டில் எல்லோருமே பெண் பிள்ளைகள்தான். எனக்கு 2 பெண் பிள்ளைகள். என்னுடைய தங்கைக்கு 3 பெண் பிள்ளைகள். அக்காவுக்கு 2 பெண் பிள்ளைகள். இப்படி எங்களை சுற்றி எல்லாமே பெண்கள்தான். அதனால், எங்களுக்கு ஆண்கள் பெரிதாக பரிட்சயமில்லை. முதன்முதலில் எங்கள் வீட்டில் கால் வைத்த ஆண் மகன் ரவிதான். பேரன் வேண்டுமென்று வேண்டினேன். அதேபோல் ரவி மூலம் எனக்கு 2 பேரன்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.

Read More : IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் தோனி..!! சிஎஸ்கே நிர்வாகம் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement