For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கணவரின் விபரீத ஆசை.!! 15 வயது சிறுமியை உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்த மனைவி..!! வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

Nanda arranged for a 15-year-old girl to frolic with her husband. Using this, Sarath called the girl several times over the years and had sex.
01:18 PM Aug 15, 2024 IST | Chella
கணவரின் விபரீத ஆசை    15 வயது சிறுமியை உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்த மனைவி     வெளியான அதிர்ச்சி பின்னணி
Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே திங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான சரத் என்பவரின் மனைவி நந்தா (24). இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், நந்தாவுக்கும் வேறொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த கணவர் சரத், மனைவியை கண்டித்ததோடு, இனி இருவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ முடியாது. இதனால், இருவருமே பிரிந்துவிடுவோம் என்று கூறி மிரட்டி வந்துள்ளார்.

Advertisement

அதே சமயம், மீண்டும் என்னுடன் வாழ விரும்பினால், ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்க நீ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனைவியிடம் தனது விபரீத ஆசையை கணவர் சரத் தெரிவித்துள்ளார். முதலில் இதை செய்ய முடியாது என்று கூறிய நந்தா, கணவர் மிரட்டியதால் வேறு வழியின்றி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, 15 வயது சிறுமியை கணவருடன் உல்லாசமாக இருக்க நந்தா ஏற்பாடு செய்தார். இதைப் பயன்படுத்திய சரத், சில ஆண்டுகளாக சிறுமியை பலமுறை அழைத்து உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, பள்ளியில் அந்த சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆசிரியை, அவரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அதன் பின்னர் தான், சரத் தன்னை பலமுறை அழைத்து அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, சம்பவம் குறித்து பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவர் சரத், மனைவி நந்தா ஆகியோரை கைது செய்தனர்.

Read More : 7 கிலோ வரை மளமளவென குறையும் உடல் எடை..!! பிரபல நடிகை சொன்ன கேரள பானத்தின் ரகசியம்..!!

Tags :
Advertisement