For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடிக்கடி வெளியூர் வேலைக்கு செல்லும் கணவர்..!! கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

As the husband was often out of town, she went to train at a beauty parlor in Aroor to set up a Tamil Literary Beauty Parlor.
04:54 PM Oct 25, 2024 IST | Chella
அடிக்கடி வெளியூர் வேலைக்கு செல்லும் கணவர்     கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி     கடைசியில் நடந்த ட்விஸ்ட்
Advertisement

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கணபதிபட்டி காலனியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான ராஜாராம் (30). உள்ளூரில் வேலை இல்லாததால், கோவைக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்துள்ளார். கணவன் அடிக்கடி வெளியூருக்கு சென்றதால், அரூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் தமிழ் இலக்கியா பியூட்டி பார்லர் வைப்பதற்காக பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, சரவணகுமார் என்பவருடன் தமிழ் இலக்கியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், ராஜராமுக்கும் கள்ளக்காதலன் சரவணக்குமாருக்கும் ஒரு கட்டத்தில் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது கள்ளக்காதல் விவகாரம் ராஜராமுக்கு தெரியவந்தது. இதனால் தமிழ் இலக்கியாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் ராஜாராம். இதுபற்றி தமிழ் இலக்கியா தனது கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார்.

அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ராஜாராமை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு தமிழ் இலக்கியாவின் கணவர் ராஜாராம் வந்துள்ளார். அப்போது சரவணகுமார், நண்பர் என்ற முறையில் இலக்கியாவின் கணவரை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த ராஜாராமை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.

கல்லடிப்பட்டி பகுதியில் வந்தபோது அதிக போதையால் ராஜராமுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் நிறுத்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் இலக்கியாவின் கள்ளக்காதலன் சரவணகுமார் அருகே இருந்த கல்லை எடுத்து ராஜாராமின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். தற்போது இந்த வழக்கில் தமிழ் இலக்கியா மற்றும் கள்ளக்காதலன் சரவணகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More : மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்..!! அதுவும் தமிழ்நாட்டில் வேலை..!! இந்த தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Tags :
Advertisement