முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கணவர் வேறொரு நடிகையுடன் உடலுறவு..!! நேரில் பார்த்த காதல் மனைவி..!! பிரபல நடிகர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Kannada actor Yuvrajkumar has filed for divorce from his love wife Sridevi Bhairappa, alleging that she was harassing him.
08:31 AM Jun 13, 2024 IST | Chella
Advertisement

கன்னட நடிகர் யுவராஜ்குமார் தன் காதல் மனைவியான ஸ்ரீதேவி பைரப்பா தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார். 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் கணவன், மனைவியாக 5 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது இவர்களது உறவு விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்நிலையில், யுவராஜ்குமாரின் வக்கீல் நோட்டீஸுக்கு ஸ்ரீதேவி பதில் அளித்திருக்கிறார்.

Advertisement

அதில், யுவராஜின் செயலால் நான் மனவேதனை அடைந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக மனதளவிலும், உடல் அளவிலும் காயப்பட்டிருந்தபோதிலும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டேன். தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகையுடன் தொடர்பு வைத்து சிக்கினார் யுவராஜ்குமார். ஓராண்டு காலமாக யுவராஜுக்கும், அந்த நடிகைக்கும் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது.

2023 டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோது யுவராஜ்குமார் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தேன். யுவராஜ்குமாரும், அந்த நடிகையும் ஹோட்டல் அறையில் இருந்தபோது அவர்களை கையும் களவுமாக பிடித்தேன். இதனால் அவர் என்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்தார். என்னை வெளியே அனுப்பிவிட்டு அந்த நடிகையை வீட்டிற்குள் அழைத்து உபசரித்திருக்கிறார்கள். யுவராஜ்குமார் என் மீது பொய் புகார்கள் சுமத்துகிறார்” என்றார்.

ஸ்ரீதேவியின் வழக்கறிஞர் அனுப்பியிருக்கும் பதில் நோட்டீஸில், ”யுவராஜ்குமார் ஒரு கணவராக தன் கடமையை செய்யாமல் மனைவி மீது பொய் புகார் தெரிவிப்பதுடன், துரோகமும் செய்திருக்கிறார். காதலியை திருமணம் செய்து கொண்ட யுவராஜ், தற்போது நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். தாலி கட்டிய மனைவியிடம் கண்ணியமாக நடந்து கொள்ளத் தவறிவிட்டார். ஹோட்டல் அறையில் நடிகையுடன் யுவராஜ்குமாரை பிடித்த பிறகு ஸ்ரீதேவி கேள்வி கேட்டது தான் கொடுமையா?

யுவராஜ்குமாருக்கு உடல் அளவிலும், மனதளவிலும் டார்ச்சர் கொடுத்தார் ஸ்ரீதேவி என்பதை அவர் மறுக்கிறார். குடும்பத்தை பிரிக்க வேண்டும் என ஸ்ரீதேவி நினைத்திருந்தால், உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு செல்லும் வரை அவர் ஏன் யுவராஜ்குமாரின் பெற்றோருடன் வசித்திருக்கப் போகிறார். ஸ்ரீதேவி பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால், தன் சில கோடிகள் மதிப்புள்ள நகைகளை மாமியாரிடம் கொடுத்து வைத்திருக்க வேண்டியது இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தமிழக பாஜக யாருக்கு..? தமிழிசைக்கு மட்டுமல்ல அண்ணாமலைக்கும் செம டோஸ்..!! ஓரிரு நாளில் வெளியாகும் அறிவிப்பு..!!

Tags :
Actor Yuvaraj KumardivorcelovemarriageSri Devi
Advertisement
Next Article