முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கணவருக்கும், மகனுக்கும் பெற்ற மகளை விருந்தாக்கிய தாய்..!! 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

The girl's adoptive father Surechander and his son Siva sexually harassed the girl.
10:49 AM Oct 09, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் உள்ள மாதவரம், பாரதியார் மூன்றாவது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் சுரேசந்தர். இவருக்கு வயது 53. இவரின் இரண்டாவது மனைவி மல்லி (வயது 35). இவர்களுக்கு சிவா என்ற 24 வயதுடைய மகன் இருக்கிறார். இவர்கள் மூவரும், மல்லியுடைய முதல் கணவரின் மூலம் பிறந்த 15 வயது பெண் குழந்தையுடன் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகின்றனர்.

Advertisement

சிறுமி அங்குள்ள அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை பயின்றுவிட்டு, பின் மேற்படி படிக்கச் செல்லவில்லை. இதற்கிடையே, சிறுமியின் வளர்ப்புத் தந்தையான சுரேசந்தர், அவரின் மகன் சிவா ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தந்தையும், மகனுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இந்த விஷயத்திற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்திருக்கிறார். இதனால், சிறுமி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியது அம்பலமானது. இதனையடுத்து தாய், வளர்ப்புத் தந்தை, அவரின் மகனை கைது செய்த போலீசார், அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைதானவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களின் பெயரும் இங்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? ரூ.35,000 சம்பளத்தில் வேலை ரெடி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
சிறுமிசென்னைதாய்பாலியல் தொல்லை
Advertisement
Next Article