For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி சம்பவம்..!! குடிநீர் தொட்டிக்குள் மலத்தை கலந்த அண்ணி.! கொழுந்தன் பரபரப்பு புகார்.!

09:41 AM Feb 01, 2024 IST | 1newsnationuser4
அதிர்ச்சி சம்பவம்     குடிநீர் தொட்டிக்குள் மலத்தை கலந்த அண்ணி   கொழுந்தன் பரபரப்பு புகார்
Advertisement

கடலூர் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரிடையே கடந்த ஒரு வருடமாக மோதல் போக்கு நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஷ் வீட்டு குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் மனித மலம் கலக்கப் பட்டிருப்பதை கண்டு வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பனியன் துணியில் சுற்றப்பட்ட நிலையில் மனிதக் கழிவு தண்ணீர் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வெங்கடேஷ். மேலும் குடும்பப் பிரச்சனை காரணமாக தனது அண்ணி தான் குடிநீர் தொட்டிக்குள் மலத்தை வீசி இருப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . குடும்பத் தகராறு காரணமாக தண்ணீர் தொட்டிக்குள் மலம் வீசிய சம்பவம் விருதாச்சலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement