For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.250 கோடியில் பிரம்மாண்ட பங்களா..!! மகளுக்கு பரிசளிக்கும் ரன்பீர் - அலியா தம்பதி..!!

02:55 PM Mar 29, 2024 IST | Chella
ரூ 250 கோடியில் பிரம்மாண்ட பங்களா     மகளுக்கு பரிசளிக்கும் ரன்பீர்   அலியா தம்பதி
Advertisement

பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக இருக்க வேண்டும் என தங்களது மகள் ராஹா பெயரில் நடிகர் ரன்பீர் - அலியா தம்பதி ரூ.250 கோடி ரூபாயில் சொத்து வாங்க இருக்கிறார்களாம். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Advertisement

திருமணமான நடிகர்கள் ரன்பீர் - அலியா தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது. தந்தை ரன்பீர் போலவே இருக்கும் ராஹாவின் க்யூட்டான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்குவார்கள். ஒரு வயது நெருங்க இருக்கும் ராஹாவை பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது ரன்பீர்- அலியா தம்பதி.

அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் ரன்பீர்- அலியா ஐந்து தளங்கள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பணிகளை சென்று மேற்பார்வையிட்டனர். இந்த வீட்டின் பணிகளை முழுதாக முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் எடுக்கும் என்கிறார்கள். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் கிட்டத்த ரூ. 250 கோடி இருக்குமாம். இந்த வீட்டை தங்கள் மகள் ராஹா பெயரில் பதிவு செய்ய இருக்கிறார்கள் ரன்பீர்- அலியா. இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ராஹா இருப்பார். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Read More : Tasmac | டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு..? 2 மணி நேரம்..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Advertisement