முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’உன் கூடவே எத்தனை நாளைக்கு அப்படி இருக்குறது’..? கள்ளக்காதலியின் குழந்தைகள் மீது ஆசைப்பட்ட கள்ளக்காதலன்..!! நடந்தது என்ன..?

According to the complaint filed by the child's father, Anand, Rajesh had been sexually harassing the children by often showing them obscene pictures, and the boy had died after being attacked by them in anger due to their shouting.
07:21 AM Oct 03, 2024 IST | Chella
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை தணிகைவேல் நகரை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் ராஜேஷ் (34). இவர், நில அளவை துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ராஜேஷ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆனந்த் என்பவருடன் திருமணமாகி 9 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர்.

Advertisement

குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தனலட்சுமிக்கும், ராஜேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளனர். இதற்கிடையே, குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நேரத்தில் வீட்டுக்கு வந்து ராஜேசும், தனலட்சுமியும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷ் சம்பவத்தன்று, தனலட்சுமியின் 2 குழந்தைகளையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைகளிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த ராஜேஷ், சிறுவனை சரமாரி தாக்கியுள்ளார். இதில் சிறுவன் மயக்கமடைந்துள்ளான். இதையடுத்து, யாருக்கும் தெரியாமல் சிறுவன் மற்றும் சிறுமியை தனலட்சுமியின் வீட்டில் படுக்க வைத்துவிட்டு ராஜேஷ் சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, குழந்தைகள் தூங்குவதாக நினைத்துள்ளார். வெகுநேரமாக சிறுவன் எழாமல் மயங்கிய நிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை ஆனந்த் அளித்த புகாரின்பேரில் ராஜேஷ், குழந்தைகளிடம் அடிக்கடி ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அவர்கள் கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் சிறுவனை தாக்கியதில் உயிரிழந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கொலை, போச்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சர்வேயர் ராஜேஷை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : ஐபிஎல் 2025!. தோனியை தக்கவைக்க மாட்டோம்!. சிஎஸ்கே CEO முக்கிய அப்டேட்!

Tags :
ஆபாசம்காஞ்சிபுரம் மாவட்டம்சிறுவன்விசாரணை
Advertisement
Next Article