For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புற்றுநோயை உருவாக்கும் வீட்டு உபயோக பொருட்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்

05:40 AM Apr 24, 2024 IST | Baskar
புற்றுநோயை உருவாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்   வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

நாம் அன்றாட வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் மூலமாகவே புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது..

Advertisement

புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஏதோ ஒரு வகையில் புற்றுநோயை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய் குறித்த பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், மறுபுறம் நம்மை நடுங்க வைக்கக் கூடிய பல தகவல்களும் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் நாம் பயன்படுத்தக் கூடிய வீட்டு பொருட்கள் நமக்கு புற்றுநோயை உண்டாகுகிறது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்கள், மெழுகுவர்த்திகள் வரை வீட்டுப் பொருட்களில் பல பென்சீன், அஸ்பெஸ்டாஸ், வினைல் குளோரைடு, ரேடான், ஆர்சனிக், டிரைகுளோரோஎத்திலீன் போன்ற நச்சுப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

புற்றுநோயை உண்டாக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்:

1)நான்-ஸ்டிக் குக்வேர்(Nonstick Cookware): டெஃப்ளான்-பூசப்பட்ட பாத்திரங்கள் அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்படும் போது தீங்கு விளைவிக்கும் பெர்ஃபுளோரினேட்டட் ரசாயனங்களை வெளியிடுகின்றன. இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் என்பதை பலரும் அறியாத ஒன்று. அதற்கு பதிலாக பீங்கான் மற்றும் வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

2)மெழுகுவர்த்திகள் (Candle): வாசனைக்காக சிலர் வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை தினமும் வீட்டில் ஏற்றி வைப்பார்கள். அவற்றை எரிக்கும் போது புற்றுநோயுடன் தொடர்புடைய டோலுயீன் மற்றும் பென்சீன் போன்ற ரசாயனங்கள் வெளியாகின்றன. அதற்கு பதிலாக சோயா மெழுகுவர்த்திகள் மற்றும் தேன் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

3)வண்ணப்பூச்சுகள்(Paints) : சில வகையான வண்ணப்பூச்சுகள் மற்றும் வார்னிஷ்கள் போன்ற கரைப்பான்களில் பென்சீன், ஃபார்மால்டிஹைட், டோலுயீன் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், காற்றை உள்ளிழுப்பதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

4)பிளாஸ்டிக் கொள்கலன்கள்(Plastic containers): பிளாஸ்டிக் கப் மற்றும் கேன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த பிளாஸ்டிக் கொள்கலன்களில் பிஸ்பெனால் ஏ (பிபிஏ) மற்றும் பித்தலேட்டுகள் இருக்கலாம், இவை இரண்டும் கார்சினோஜென்ஸ் ஆகும். உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க பிளாஸ்டிக் கப் பயன்படுத்தக் கூடாது.

5)வீட்டு துப்புரவுப் பொருட்கள்(Household Cleaning Products): பல வழக்கமான துப்புரவுப் பொருட்களில் ஃபார்மால்டிஹைட், அம்மோனியா, குளோரின் ப்ளீச் போன்ற புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் உள்ளன. அதற்கு பதிலாக சுற்றுச்சூழல் நட்பு, நச்சுத்தன்மையற்ற மாற்றுகளைப் பயன்படுத்தவும். வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

6)பூச்சிக்கொல்லிகள்(Pesticides): பூச்சிக்கொல்லிகள் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த இரசாயனங்களின் வெளிப்பாடு லுகேமியா மற்றும் லிம்போமா உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இயற்கை பூச்சி கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது சிறந்தது.

7)மின்காந்த கதிர்வீச்சு(Electromagnetic radiation): எலக்ட்ரானிக்ஸ் முதல் வைஃபை ரவுட்டர்கள் வரை, மின்காந்த கதிர்வீச்சின் ஆதாரங்கள் நம் வீடுகளில் ஏராளமாக உள்ளன. வைஃபை ரவுட்டர்களில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கும்.

Read More: Patanjali | “பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்” – உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டனம்!

Tags :
Advertisement