For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பழங்குடியின பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

The incident of a tribal woman being brutally beaten and chilli powder sprinkled on her genitals over a debt issue has caused a great shock.
01:35 PM Jun 25, 2024 IST | Chella
பழங்குடியின பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல்     வெளியான அதிர்ச்சி வீடியோ
Advertisement

கடன் பிரச்சனை தொடர்பாக பழங்குடியினப் பெண்ணை கொடூரமாக தாக்கியும், பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியும் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பழங்குடியினப் பெண் ஒருவாரமாக பொது இடத்தில் வைத்து மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜூன் 8 ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால், ஜூன் 19ஆம் தேதி தான் போலீசாரின் கவனத்திற்கு வந்திருக்கிறது. பின்னர், இந்த சம்பவத்திற்கான காரணத்தை விசாரணை மேற்கொண்டு, ஜூன் 20ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பழங்குடியினப் பெண், பாண்டி வெங்கடேசன் என்பவரிடம் கடன் வாங்கிய பணம் தொடர்பான, தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடன் வாங்கிய ஈஸ்வரம்மா (பழங்குடியினப் பெண்) பணத்தை செலுத்த முடியாமல், பாண்டி வெங்கடேசனின் செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் (கொத்தடியமாக) என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதே செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த தனது சகோதரியுடன் வாக்குவாதம் செய்த சில நாட்களுக்குப் பிறகு, ஈஸ்வரம்மா வேலை செய்யாமல் வெளிநடப்பு செய்துள்ளார்.

இதையடுத்து, கடன் பிரச்சனை தொடர்பாக ஈஸ்வரம்மாவை கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் அவரது கண்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் மிளகாய் பொடியை தடவி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக பாண்டி வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி, பாதிக்கப்பட்டவரின் சகோதரி மற்றும் கணவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read More : உயரத்திற்கு ஏற்ப எடை..!! எப்படி கணக்கிடுவது..? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement