முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து... 5 பேர் ஸ்பாட் அவுட்... 19 பேர் மருத்துவமனையில் அனுமதி...!

06:46 AM Dec 30, 2023 IST | 1newsnationuser2
Advertisement

திருச்சி - ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது மோதியதில் லாரி மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சிமெண்டை ஏற்றுக்கொண்டு சென்றுள்ளது. நமணசமுத்திரம் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது மோதியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வயது சிறுமி உட்பட 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நடந்த இந்த கோர சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Accidentlorry accidentRameshwaramTrichy
Advertisement
Next Article