For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...! 3 இடத்தில் பள்ளி மட்டும் லீவ்...!

06:40 AM Jan 08, 2024 IST | 1newsnationuser2
4 மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை     3 இடத்தில் பள்ளி மட்டும் லீவ்
Advertisement

கன மழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதே போல கனமழை பெய்து வருவதால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நள்ளிரவு முதல் பெய்து வரும் பலத்த மழையின் அளவு 58 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

Tags :
Advertisement