முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே கவனம்...! இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

Holiday notification for schools today
06:08 AM Sep 14, 2024 IST | Vignesh
Advertisement

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வுகள் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி-II & II A பணிகள்)- இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR முறை) முதனிலைத் தேர்வு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. பள்ளி வளாகத்தில் இத்தேர்வினை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 விண்ணப்பதாரர்கள் எழுதவுள்ளனர். இவர்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசு பணியாளர் இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வுகள் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Edu departmentholidayschooltn government
Advertisement
Next Article