For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Holiday | தமிழ்நாட்டில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

07:55 AM Mar 02, 2024 IST | 1newsnationuser6
holiday   தமிழ்நாட்டில் இந்த மாவட்ட பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை     மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

Advertisement

அந்த வகையில், வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 23ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “Lok Sabha தேர்தல் தேதி அறிவித்த பின் இதை மட்டும் செய்யாதீங்க”..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

Advertisement