For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளை முதல் தொடர் விடுமுறை..!! மதுபாட்டில்களை வாங்கிக் குவிக்கும் மதுப்பிரியர்கள்..!!

10:38 AM Apr 16, 2024 IST | Chella
நாளை முதல் தொடர் விடுமுறை     மதுபாட்டில்களை வாங்கிக் குவிக்கும் மதுப்பிரியர்கள்
Advertisement

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 17 (நாளை) முதல் வாக்குப்பதிவு நாளான வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), மற்றும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 ஆகிய நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II (a) ஆகியவைகளின் கீழ், இந்த உத்தரவு சில வாரங்களுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்து இரவு 10 மணி வரை செயல்படும். தொடர் விடுமுறை காரணமாக இன்றைய தினம் மதுபாட்டிகளை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க மதுப்பிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Read More : அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிக்க தோணுதா..? இதில் எவ்வளவு ஆபத்து இருக்குன்னு தெரியுமா..?

Advertisement